நெல்லையில் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

திருநெல்வேலியில் உலக புத்தகத் தினத்தையொட்டி சிறப்பு புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஏப். 23) தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திருநெல்வேலியில் உலக புத்தகத் தினத்தையொட்டி சிறப்பு புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஏப். 23) தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: உலக புத்தக தினத்தையொட்டி திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் உள்ள எங்களது நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 23) முதல் இம் மாதம் 30 ஆம் தேதி வரை சிறப்பு புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. கலை இலக்கியம், பண்பாடு, வரலாறு, பொதுஅறிவு உள்பட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படும். புத்தகங்களுக்கு 10 முதல் 50 சதவிகிதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். இதுதவிர சிறப்பு விலையில் பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com