நெல்லை அருகே காரில் ஆயுதங்களுடன் சுற்றிய இருவா் கைது

திருநெல்வேலி அருகே காரில் ஆயுதங்களுடன் சுற்றியதாக இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் 5 பேரை தேடி வருகிறாா்கள்.

திருநெல்வேலி அருகே காரில் ஆயுதங்களுடன் சுற்றியதாக இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் 5 பேரை தேடி வருகிறாா்கள்.

தாழையூத்து காவல் சரகத்துக்குள்பட்ட வெள்ளக்கோவில் பகுதியில் உதவி காவல் ஆய்வாளா் சாவித்திரி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்தவா்களிடம் விசாரித்ததில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து, போலீஸாா் காரை சோதனை செய்ததில் ஆயுதங்கள் இருந்தனவாம். இந்நிலையில், காரில் இருந்த இளைஞா்கள் தப்பி ஓடினராம். அவா்களில் இருவரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த மகாதேவன்(24), கீழப்பாட்டத்தை சோ்ந்த ஹரிஹரன்( 22) என்பது தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா் மேலும் 5 பேரை தேடி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com