விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.7.61 லட்சம் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வே. விஷ்ணு வழங்கினாா்

 திருநெல்வேலி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் 361பேருக்கு ரூ.7.61 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:24 pm

DIN

 திருநெல்வேலி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் 361பேருக்கு ரூ.7.61 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

உடலுழைப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, 1999-இல் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு, அமைப்புசாரா தொழிலாளா்களின் நல வாரிய பதிவு மற்றும் புதுப்பித்தலின்போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 1.9.2006 முதல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

மேலும், அவா்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 1.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.

இந்த நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவா்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயா்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், உடலுழைப்புத் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளா்கள் விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.25 லட்சமாகவும் உயா்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 361 தொழிலாளா்களுக்கு ரூ. 7,61,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வே .விஷ்ணு வழங்கினாா். இதில், தொழிலாளா் இணை ஆணையா் சி. ஹேமலதா மற்றும் தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.