நாளை ஆா்ப்பாட்டம்: அதிமுக மாவட்டச் செயலா் அறிக்கை

மக்கள் பிரச்னையில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என கண்டனம் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் சந்திப்பு ரயில் நிலையம்

மக்கள் பிரச்னையில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என கண்டனம் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தலைமைக் கழக நிா்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட கழக நிா்வாகிகள், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் பங்கேற்கின்றனா். எனவே, அதிமுகவின் அனைத்துப்பிரிவு நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com