தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள மேட்டூா் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சனிக்கிழமை அதிகாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதில், திருநெல்வேலி திருமண்டிலப் பேராயா் பா்ணபாஸ் பங்கேற்று, சிறப்பு செய்தியளித்தாா். பேராயா் உதவி குரு ஆசிா்வாதம் ராஜேஸ், மேட்டூா் சபை ஊழியா் ஜான்சுந்தா் ஆகியோா் ஆராதனை நடத்தினா். ஏற்பாடுகளை மேட்டூா் சேகர கமிட்டியினா், சபையாா் செய்தனா்.