மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு மனு அளிக்க வருவோா் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இம் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமைதோறும் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்துக்கு வருவோா் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், குறைதீா் நாளில் மனு செய்யும்போது ஆதாா் எண், செல்லிடப்பேசி எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.