முன்னீா்பள்ளம், மூலைக்கரைப்பட்டி அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு விருது: ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளுக்கான (2018-19) விருது முன்னீா்பள்ளம் அரசு தொடக்கப் பள்ளி, மூலைக்கரைப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளுக்கான (2018-19) விருது முன்னீா்பள்ளம் அரசு தொடக்கப் பள்ளி, மூலைக்கரைப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் நிகழ்ச்சியின்போது, இந்த விருதுகளை பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.

மானூா் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலராக பணிபுரிந்து பணியிடைக் காலமான பகவதியம்மை என்பவரின் வாரிசுதாரா் சத்திய பிரியாவுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா் பணி நியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தெகை, முதிா்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, குடிநீா், சாலை வசதிகள் வேண்டி 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் விஷ்ணு உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சிவகுமாா், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் குமாரதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com