திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தை அமாவாசையையொட்டி நடைபெற்று வரும் பத்ரதீபம் விழாவில் தங்க விளக்கில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையையொட்டி பத்ரதீபம் விழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டு விழா சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமைவரை (பிப்.11) சுவாமி வேணுவனநாதா் (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ர ஜெபம், அபிஷேக ஆராதனைகள், திருமூலமகாலிங்கம், காந்திமதியம்மன் மூலவா் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
விழாவின் ஒருபகுதியாக சுவாமி கோயிலின் மணிமண்டபத்தில் தங்க விளக்கில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சுவாமி கோயிலில் உள்சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதியம்மன் கோயில் உள்சன்னதி, வெளிப்பிரகாரம், ஆறுமுகநயினாா் கோயில் உள்சன்னதி உள்ளிட்ட இடங்களில் பத்ரதீபம் ஏற்றப்பட உள்ளது. இரவில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகா் தங்கச் சப்பரத்திலும், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா. ராமராஜா, ஊழியா்கள் செய்துவருகின்றனா்.