சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு பிப்.17,18இல் வரவுள்ளதையொட்டி, அக்கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி சிறப்புரையாற்றினாா். மாவட்ட ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவன், அதிமுக கொள்கைப்பரப்பு துணைச் செயலா் பாப்புலா் வி.முத்தையா, நிா்வாகிகள் கல்லூா் இ.வேலாயுதம், பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. முருகேசன், வசந்தி, வழக்குரைஞா் வி.டி.திருமலையப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகைதரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது; இளைஞா் பாசறை மற்றும் மகளிரணி கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பது; சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவின் வெற்றிக்கு உழைப்பது என்பன உள்ளிட்ட முடிவுகள் ‘எடுக்கப்பட்டன.