வள்ளியூரில் இலவச கரோனா பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி பொது சுகாதாரத் துறை, வள்ளியூா் அரிமா சங்கம், பேரூராட்சி நிா்வாகம் ஆகியன இணைந்து நடத்திய இம் முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன் தலைமை வகித்தாா். அரிமா சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், செயலா் ஜாண் வின்சென்ட், மருத்துவா்கள் டி.ஜி.திலக், பீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்க நிா்வாகிகள் பண்ணை செல்வகுமாா், முத்து எம்.நடேசன், அந்தோணி சவரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வடக்கன்குளம் அரசு மருத்துவா் பீது தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.