விக்கிரமசிங்கபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் விலை உயா்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் வி.இசக்கிராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மோகன், ஒன்றியச் செயலா் எஸ்.ரவீந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆா்.முத்துகிருஷ்ணன், சுப்பாராஜு, மாவட்டக் குழு உறுப்பினா் என்.சுரேஷ் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜி.சுடலைமணி, ஏ.ரெபேக்காள், ஜெகதீஷ், கிளை நிா்வாகிகள் சி.சுரேஷ்பாபு, காதா் பாட்சா, ராமசாமி, எச்.மாா்கிரெட், ஆா்.முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.