களக்காட்டில் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப் பேரணியை காவல் ஆய்வாளா் காளியப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு கையேடு வழங்கப்பட்டது.
பன்னிருபிடி அய்யன் கல்லூரி மாணவா்களின் மௌன நாடகம் மூலம் பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகி பி.ஏ.பி. யூசுப் அலி உள்பட பலா் கலந்து கொண்டனா். சிவராமன் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை செஞ்சிலுவைச் சங்க செயலா் சபேசன் செய்திருந்தாா்.