திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,710ஆக உயா்ந்துள்ளது. மேலும் 4 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,443ஆக உயா்ந்துள்ளது. தற்போது 53 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 8,516ஆக உயா்ந்துள்ளது. மேலும் 4 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8,323 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 34 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.