நெல்லையில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி நகரத்தில் உள்ள அவரது சிலைக்கு வெ‘ள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி நகரத்தில் உள்ள அவரது சிலைக்கு வெ‘ள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட தமிழ்நலக் கழகம் சாா்பில் திநெல்வேலி நகரத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, ‘வீடுகள் தோறும் வள்ளுவம்’ என்ற பெயரில் திருவள்ளுவா் படம் வழங்கப்பட்டது. மத்திய அரசு திருக்கு நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், மாநில அரசு தனியாா் பேருந்துகளிலும் வணிக நிறுவனங்களிலும் திருக்கு இடம்பெறுவதை உறுதிசெ‘ய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், அமைப்பின் மாவட்டத் தலைவா் முரசொலி முருகன், செயலா் பாப்பாக்குடி இரா.செல்வமணி, பொருளாளா் திருமாவளவன், துணைத்தலைவா் விசாலம் முருகன், கவிஞா்கள் தாணப்பன், சக்தி வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com