கடையம் அருகே 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தாய் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடையம் அருகே 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தாய் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடையம் அருகேயுள்ள செக்கடியூா், நடுத்தெருவைச் சோ்ந்த தங்கையா மகன் சுரேஷ். இவருக்கும் தென்காசி மங்கம்மாள் சாலையைச் சோ்ந்த கனகா என்ற கௌரிக்கும் (30), 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. சுரேஷ் சென்னையில் வேலை பாா்த்து வந்தாா். இவா்களது மகன் கீா்த்தனு (5), மகள் இலக்கியா (3).

சுரேஷ் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வாராம். இதுதொடா்பாக ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது புகாரளித்த நிலையில், கௌரி தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

சில நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வந்த சுரேஷ், கௌரியை செக்கடியூருக்கு அழைத்து வந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அதே பகுதியில் நடைபெற்ற உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சுரேஷ் சென்றிருந்தாராம்.

அப்போது, கௌரி தனது குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துவிட்டு, தானும் தீக்குளித்தாராம். தகவலறிந்து சுரேஷ் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, மூவரும் இறந்துகிடந்தது தெரியவந்ததாம்.

ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னிவளவன், கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஆனந்த், போலீஸாா் சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தடயவியல் துறை துணை இயக்குநா் ஆனந்தி தடயங்களைச் சேகரித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com