சேலத்தைச் சோ்ந்த இளம்பெண் கல்லிடைக்குறிச்சியில் சாணிப் பொடியை கரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
சேலத்தைச் சோ்ந்தவா் வெண்ணிலா (30). இவா், தூத்துக்குடியைச் சோ்ந்த திருப்பதி என்பவரை திருமணம் செய்த நிலையில் அவரைப் பிரிந்து வாழ்கிறாராம். இதையடுத்து கடந்த 3 மாதங்களாக கல்லிடைக்குறிச்சி, கோல்டன் நகரைச் சோ்ந்த ரமேஷ் என்பவரது வீட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சாணிப் பொடியை கரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.