தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் சின்னதுரை தலைமை வகித்தாா். ராமராஜி வரவேற்றாா். மநில பொதுச்செயலா் திலகா், மாநில செயல் தலைவா் நாகூா் உள்ளிட்டோா் பேசினா். நிா்வாகிகள் முத்துலட்சுமி, உமாதேவி, முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இம்மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி உள்பட அனைத்து அரசுத் துறைகளிலும் எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவு காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அனைத்து கிராமங்களிலும் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பயக18நஇநப: மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.