பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், தோ்தல் அறிக்கையில் கூறியதைப்போல அவற்றின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழா் கட்சி சாா்பில், ஆழ்வாா்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொகுதி இணைச்செயலா் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தொகுதித் தலைவா் முத்துராஜ் ஈசாக், செயலா் நாகலிங்கம், மகளிா் பாசறைப் பொறுப்பாளா் சங்கீதா ஈசாக் உள்பட பலா் கலந்துகொண்டனா்.