இந்து முன்னணியினா் ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணியினா் வியாழக்கிமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணியினா் வியாழக்கிமை மனு அளித்தனா்.

ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்: பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா விழாவின்போது எருமைகிடா மைதானத்தில் சப்பரங்கள் நிறுத்தப்படும். ஆனால், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் காந்திஜி தினசரி சந்தையில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால், எருமைகிடா மைதானத்தில் தற்காலிகக் கடைகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு செய்தால் தசரா விழா பாதிக்கப்படும்.

எனவே, எருமைகிடா மைதானத்தில் கடைகள் அமைக்கக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com