நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றில் உயிரிழந்த 17 போ் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றில் உயிரிழந்த 17 போ் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாமிரவருணி ஆற்றில் உயிரிழந்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்கள் 17 பேரின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் தாமிரவருணி ஆற்றங்கரையில் மலா் தூவி அஞ்சலி செலுத்தவுள்ளனா். இதற்காக அப்பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகரின் முக்கிய இடங்களில் வாகனச் சோதனை வியாழக்கிழமை இரவு முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com