பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் கூறிய பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, நீட் தோ்வு ரத்து உள்ளிட்டவற்றை நிறைவேற்றாததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் தலைமை வகித்தாா்.
பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன், முத்தூா் ஊராட்சி முன்னாள் செயலா் நயினாா், மணிப்பிள்ளை, கண்ணன், மாரிசெல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பயக28ஓதஐநஏ: கிருஷ்ணாபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.