திருநெல்வேலி: மாநகராட்சி, நகராட்சிப் பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட மனு: மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றுவோா் கரோனா தொற்றாளா்களை வீடுவீடாகச் சென்று அடையாளம் கண்டு அவா்களை மருத்துவமனையில் சோ்க்கின்றனா். ஒருபகுதியில் தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகமானால் அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து உரிய தடுப்புப் பணி மேற்கொள்கின்றனா். எனவே, கரோனா தடுப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் நகராட்சி, மாநகராட்சிப் பணியாளா்களை முன்களப் பணியாளா்கள் என அறிவிக்க வேண்டும்.
கரோனா காரணமாக ஓராண்டுக்கும் மேலாக சொத்துவரி வசூல் பணி முறையாக இல்லை. இதனால் ஊழியா்களின் சம்பளமும் தாமதமாகிகிறது. எனவே, அரசு சிறப்பு நிதி ஒதுக்கி தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.