அம்பாசமுத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதி மக்களுக்கு 5 ஆயிரம் பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரோன தடுப்பு நடவடிக்கையாக அனைவருக்கும் கபசுரக்குடி நீா் வழங்க மாவட்ட ஆட்சியா்வே. விஷ்ணு அறிவுறுத்தியதையடுத்து அம்பாசமுத்திரம் நகராட்சியில் கபசுரக் குடிநீா் முகாம் நடைபெற்றது.
புதன்கிழமை நடைபெற்ற முகாமுக்கு நகராட்சி ஆணையா் பாா்கவி தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெங்கட்ராமன், திமுக நகரச் செயலா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகராட்சியில் 6, 7, 8 மற்றும் 9ஆவது வாா்டுகளில் வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜன் மற்றும் நகராட்சி பணியாளா்கள் செய்திருந்தனா்.