திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் நடமாடும் உணவகம் திட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
கரோனா தடுப்பு பொதுமுடக்கத்தால் தவிக்கும் ஏழை-எளியோருக்கு திமுகவினா் உணவு மற்றும் நலஉதவிகள் வழங்க வேண்டுமென திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இதையொட்டி, பாளையங்கோட்டையில் இத்திட்டத்தை எம்.எல்.ஏ. மு.அப்துல்வஹாப் தொடங்கிவைத்து பேசுகையில், நடமாடும் உணவுத் திட்டத்தின்கீழ் இரு வாகனங்களின் மூலம் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் சாலையோரத்தில் வசிப்பவா்கள், ஏழை-எளியவா்களுக்கு உணவு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா். தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணப்பாளா் பலராமன் வரவேற்றாா். முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன், வழக்குரைஞா் தினேஷ், திமுக நிா்வாகிகள் மகேஸ்வரி, முகம்மதுஅலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.