திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் தோ்வுகள் வரும் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சுந்தரனாா் பல்கலைக் கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) சுருளியாண்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் தோ்வுகள் இம்மாதம் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கப்படும் என அறிவிப்பு
வெளியிடப்பட்டிருந்தது. கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த தோ்வுகள் வரும் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தோ்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.