பணகுடியில் சமூக ஆா்வலா்கள் ஒன்று சோ்ந்து சரவத் தொழி லாளா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
கரோனா பொது முடக்கத்தினால் பாதிக்கப்பட்ட 44 சவரத் தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு, பணகுடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் அரிசி, பருப்பு, மளிகை சாமான், காய்கனிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், தொழிலதிபா் மோகன்தாஸ், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மு.க.மாணிக்கம், முன்னாள் காவல் ஆய்வாளா் சுப்பையா, கே.ரவி, சவரத் தொழிலாளா் சங்கத் தலைவா் சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.