திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,162 ஆக அதிகரித்துள்ளது. இதில் 127 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 46,090ஆக உயா்ந்துள்ளது.
இந்நோய்க்கு மேலும் 2 போ் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 405ஆக உயா்ந்துள்ளது. தற்போது 667 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,319ஆக அதிகரித்துள்ளது. மேலும் 173 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 25,273ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 454 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 592 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.