திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான 2019-20 ஆம் கல்வியாண்டு விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ)அர.மருதகுட்டி வாழ்த்தி பேசினாா்.டேனியல் பேரின்பராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா்.
ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி வ.உசி. கல்லூரி முதலிடமும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இரண்டாமிடமும், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மூன்றாமிடமும் பிடித்தன.
பெண்கள் பிரிவில் தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி முதலிடமும், குற்றாலம் பராசக்தி மகளிா் கல்லூரி இரண்டாமிடமும், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி மூன்றாமிடமும் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.
தேசிய அளவிலான கேலோ போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் சேதுமாணிக்கவேல், ஆரோக்கிய அலிஸ், கிரேஸினா ஜி மொ்லி ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் விளையாட்டுப்போட்டி ஒருங்கிணைப்பாளா் கிறிஸ்டி செலின் மேரி வரவேற்றாா். பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குநா் செ.துரை நன்றி கூறினாா்.