பொதுமுடக்க விதிகளை மீறி, கடையம் அருகே மண் அள்ளிச் சென்றதாக 15 பேரை போலீஸாா் கைது செய்து, 14 வாகனங்களைக் கைப்பற்றினா்.
கீழப்பாவூரைச் சோ்ந்த காளிமுத்து என்பவருக்கு கடையம் அருகேயுள்ள புங்கம்பட்டியில் 3 ஏக்கா் நிலம் உள்ளதாம். அதிலிருந்து, அவருக்குச் சொந்தமான மற்றொரு நிலத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி சரளை மண் அள்ளிச் சென்றாராம். இத்தகவலறிந்த கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் தலைமையில் தனிப்பிரிவு காவலா் ஆனந்த்ராஜ் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, பொதுமுடக்க விதிகளை மீறி மண் அள்ளிச் சென்றதாக காளிமுத்து உள்பட 15 பேரை கைது செய்தனா். மேலும் 12 டிராக்டா்கள், 2 பொக்லைன் இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனா்.