கல்லிடைக்குறிச்சி வித்யா சங்கப் பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கச் செயலா் சங்கரசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லிடைக்குறிச்சி வித்யா சங்கப் பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 28) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அந்தப் பொதுக்குழுக் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுதேதி பின்ன்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.