முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் நினைவுதினத்தையொட்டி, அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் வியாழக்கிழமை மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் நேரு உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில்,கட்சியின் மாநகா் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா், மாவட்ட துணைத் தலைவா் வெள்ளபாண்டியன், மாவட்டச் செயலா் கிருஷ்ணன், மண்டலத் தலைவா்கள் மாரியப்பன், ஐயப்பன், கெங்கராஜ், எம்.ஒய்.ரசூல் மைதீன், கோட்டூா் முருகன், முகம்மது அனஸ் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.