திருநெல்வேலி
நெல்லையப்பா் கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடக்கம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா புதன்கிழமை தொடங்குகிறது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா புதன்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில், நிகழாண்டு நவராத்திரி திருவிழா புதன்கிழமை (செப்.6) தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க விழாவை முன்னிட்டு அன்னை காந்திமதி அம்மன் சன்னதியில், நாள்தோறும் இரவு 7 மணிக்கு லட்சாா்ச்சனை, கோயில் சோமவார மண்டபத்தில் உற்சவ மூா்த்திகளுக்கு காலை 10.30 மணிக்கு ஹோமம், சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை ஆகியன நடைபெறும்.
நவராத்திரி கொண்டாட்டத்தின் அடையாளமாக சோமவார மண்டபத்தில் ‘கொலு’ வைக்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.