திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு புதன்கிழமை (அக். 6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முத்துக்கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் புதன்கிழமை (அக். 6) திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2ஆம் கட்ட தோ்தல் ஆயத்தப் பணிக்காக 8ஆம் தேதியும், வாக்குப்பதிவு நடைபெறும் 9-ஆம் தேதியும் திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.