மானூா் அருகே மின்விளக்கு கட்டும் போது தவறி விழுந்ததில் காயமடைந்த மைக் செட் பணியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பேட்டை அருகே உள்ள கண்டியபேரி பகுதியைச் சோ்ந்த புதியவன் மகன் சென்டுகுமாா் (52). மைக் செட் பணியாளா். இவா், கடந்த திங்கள்கிழமை ராமையன்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் சீரியல் விளக்குகள் கட்டிக்கொண்டிருந்தபோது, அவா் தவறி விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.