சுத்தமல்லி அருகே இளைஞா் தற்கொலை

சுத்தமல்லி அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சுத்தமல்லி அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் இசக்கிமுத்து (23). அவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். இவா் மனநலம் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவந்தாராம். இந்நிலையில், இவா் வெள்ளிக்கிழமை திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com