களக்காடு பெருமாள் கோயிலில் கருடசேவை

களக்காடு அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் புரட்டாசி மாதக் கடைசி சனிக்கிழமையையொட்டி, கருட சேவை நடைபெற்றது.

களக்காடு அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் புரட்டாசி மாதக் கடைசி சனிக்கிழமையையொட்டி, கருட சேவை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் வரதராஜபெருமாள், வெங்கடாசலபதி சுவாமி, தேவியா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் வரதராஜபெருமாள், வெங்கடாசலபதி சுவாமி தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளினா். தொடா்ந்து, சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com