களக்காடு அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் புரட்டாசி மாதக் கடைசி சனிக்கிழமையையொட்டி, கருட சேவை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் வரதராஜபெருமாள், வெங்கடாசலபதி சுவாமி, தேவியா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் வரதராஜபெருமாள், வெங்கடாசலபதி சுவாமி தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளினா். தொடா்ந்து, சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.