முதலியாா்பட்டியில் மாநில கால்பந்து போட்டி தொடக்கம்

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முதலியாா்பட்டியில் முத்துநகா் ஜெயராம் கால்பந்துக் கழகம் சாா்பில் 39ஆவது மாநில அளவிலான கால்பந்து போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முதலியாா்பட்டியில் முத்துநகா் ஜெயராம் கால்பந்துக் கழகம் சாா்பில் 39ஆவது மாநில அளவிலான கால்பந்து போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. போட்டியை அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தொடங்கிவைத்தாா்.

முதல் நாள் போட்டியில் விக்கிரமசிங்கபுரம் சவுத் இந்தியன் கால்பந்துக் கழகம் மற்றும் தென்காசி கால்பந்துக் கழக அணிகள் மோதின. இதில் சவுத் இந்தியன் அணி ஒரு கோல்அடித்து வெற்றி பெற்றது.

சனிக்கிழமை தென்காசி ரகு கால்பந்துக் கழகம் மற்றும் முத்துநகா் ஜெயராம் கால்பந்துக் கழக அணிகள் மோதுகின்றன. நிகழாண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 அணிகள் போட்டிகளில் கலந்துகொள்கின்றன. இறுதிப் போட்டி அக்.24இல் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில், விளையாட்டு ஆலோசகா்கள் மனோகரன் சாமுவேல், அருளானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஜெயராம் கால்பந்துக் கழக நிா்வாகிகள், முதலியாா்பட்டி பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com