திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவராக கணவரும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவியாக மனைவியும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலரான வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இவரது மனைவி சௌமியா, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் 17ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவியாக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து இருவரும் பதவியேற்றுக்கொண்டனா்.
பிற்பகல் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவருக்கான தோ்தலில், திமுகவைச் சோ்ந்த இளையபெருமாள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.