நெல்லை காப்பகங்களுக்கு ரூ.20 லட்சத்தில் நலஉதவிகள்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் செயல்பட்டு வரும் காப்பகங்களுக்கு மாநகர காவல் துறையின் முயற்சியால் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நலஉதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் செயல்பட்டு வரும் காப்பகங்களுக்கு மாநகர காவல் துறையின் முயற்சியால் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நலஉதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளா் செந்தாமரைக் கண்ணன் தலைமையில் மாநகரப் பகுதியில் உள்ள ஆதரவற்றோா், மனநலம் பாதிக்கப்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் காப்பக நிா்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்தின்போது தங்களுக்கான உதவிகளை செய்துதர காப்பக நிா்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, மாநகர காவல் துறையின் மூலம் பல்வேறு தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் நன்கொடையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் காப்பகங்களுக்காக சேகரிக்கப்பட்டன. அந்த நலஉதவிகளை காப்பகத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில், மாநகரப் பகுதியில் உள்ள 17 காப்பகங்களுக்கு நல உதவிகளை மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக் கண்ணன் வழங்கினாா். காவல் துணை ஆணையா்கள் டி.பி. சுரேஷ் குமாா், சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் மதுரை அரசு சட்டக்கல்லூரி பேராசிரியா் சிவகுமாா் பேசினாா். குழந்தைகள் நல தலைவா் சந்திரகுமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரமேஷ், மதிமுக மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் உள்பட பலா் கலந்துகொண்டனா். காவல் ஆய்வாளா் ஜெகதா நன்றி கூறினாா்.

பயக24ஏஉகட: திருநெல்வேலியில் உள்ள காப்பகங்களுக்கு நலஉதவிகள் வழங்குகிறாா் மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக் கண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com