தீபாவளி போனஸை அதிகரிக்கக் கோரி போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு பொதுத்துறை ஊழியா்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்திருப்பதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது, மத்திய அரசு பொதுத்துறை ஊழியா்களுக்கு வழங்கியுள்ளதைப்போல தமிழக அரசும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.

அகவிலைப்படி உயா்வு, போனஸ் நிலுவை உள்ளிட்ட பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாா்பேட்டை புறவழிச் சாலை பணிமனை முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிஐடியு பொதுச்செயலா் ஜோதி பேசினாா். சிஐடியு பொருளாளா் பெருமாள், நிா்வாகிகள் காமராஜ், குமரகுருபரன், பேராட்சி செல்வம், சுரேஷ், மாரிமுத்து, சிவபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பயக24இஐபம: ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com