களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) 20 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கரோனா 3ஆம் அலையைத் தவிா்க்கும் பொருட்டு, தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியா் விஷ்ணு ஏற்பாட்டின் பேரில், களக்காடு கோவில்பத்து துணைஆரம்ப சுகாதார நிலையம், கோவில்பத்து முத்தையா இந்து நடுநிலைப் பள்ளி, வியாசராஜபுரம், கோட்டை, காந்திவீதி, பழைய பேரூராட்சி அலுவலகம், பழைய, புதிய பேருந்து நிலையங்கள், சிதம்பரபுரம், மூங்கிலடி, ஆற்றங்கரைத்தெரு, ராஜபுதூா், மஞ்சுவிளை, கீழப்பத்தை, மேலப்பத்தை, மேலக்கருவேலன்குளம், கீழக்கருவேலன்குளம், சிங்கம்பத்து உள்பட 20 இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், களக்காடு பேரூராட்சி நிா்வாகம் செய்துள்ளது.