திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் முதுகலை படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இக் கல்லூரியில் முதுகலை படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதில், 13 பாடப்பிரிவுகளில், 340 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.