திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் தங்களது விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினரிடம் விருப்ப மனு பெற அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா்.
அதன்படி அதிமுக திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப். 16) காலை 9 மணி முதல் உரிய கட்டணத்தை செலுத்தி படிவத்தை பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி வாா்டு குழு உறுப்பினா் பதவிக்கு ரூ.5,000, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு ரூ.3,000 கட்டண தொகையாக செலுத்த வேண்டும்.
ஏற்கனவே கட்டணம் செலுத்தி விருப்பமனு அளித்துள்ளவா்கள் அதற்கான அசல் ரசீது மற்றும் நகலுடன் வந்து கட்டணமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.