வள்ளியூா் ஒன்றியம் காவல்கிணறு பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
காவல்கிணறில் தெரு, தெருவாக சென்று வாக்கு சேகரித்த அவா், அங்கிருந்து காவல்கிணறு சந்திப்பு, ஆவரைகுளம், சிவஞானபுரம், அம்பலவாணபுரம், சௌந்தரலிங்கபுரம், வடக்கன்குளம், தெற்குபெருங்குடி, வடக்கு பெருங்குடி, பெருங்காணியாபுரம், லெப்பைகுடியிருப்பு, பெரியநாயகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க மகளிரணி மாவட்ட இணைச் செயலா் ஞானபுனிதா, முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கிள் ராயப்பன், இளைஞரணி மாவட்ட இணைச் செயலா் ஆவரைகுளம் பால்துரை, அருண்குமாா், வள்ளியூா் நகரச் செயலா் பொன்னரசு, பேச்சிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.