திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,092ஆக உயா்ந்துள்ளது. 21 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,716 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 161 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,717 ஆக உயா்ந்துள்ளது. இந்நோயிலிருந்து 8 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 8467 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 89 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.