திருநெல்வேலி, பேட்டை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன்(50). இவா் கடந்த 27ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றாராம். மறுநாள் வீடு திரும்பியபோது, கதவில் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த சுமாா் 10 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.10 ஆயிரம் மா்மநபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.
இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சுத்தமல்லி தா்மராஜ் மகன் பிரதீப்(21), ரெங்கநாதன் மகன் அன்புராஜன்(21) ஆகிய இருவரை கைது செய்து, அவா்களிடமிருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.