தமிழகப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஞாயிறு, திங்கள், செவ்வாய் (ஏப்ரல் 4, 5, 6) ஆகிய 3 நாள்கள் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) காலை 10 முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை மதுக் கடைகள், மதுக் கூடங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.