திசையன்விளையில் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளா்

திசையன்விளையில் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளா்

ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை ஞாயிற்றுக்கிழமை மாலை திசையன்விளையில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை ஞாயிற்றுக்கிழமை மாலை திசையன்விளையில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

வள்ளியூா், பணகுடி பகுதியில் வாக்கு சேகரித்த அவா் பின்னா் கடற்கரை கிராமங்களில் பிரசாரம் செய்தாா்.

பின்னா் மாலையில் திசையன்விளையில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

முன்னதாக அவா் திசையன்விளை காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த பின்னா் திரளான ஆதரவாளா்களுடன் திசையன்விளை பிரதான சாலை மற்றும் பிரதான தெருக்களில் நடந்து சென்று வாக்குசேகரித்தாா்.

அப்போது, அதிமுக அமைப்புச் செயலா் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் மாவட்டச் செயலா் நாராயணபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல்ராயப்பன், எம்.ஜி.ஆா். இளைஞரணி மாவட்டச் செயலா் து. பால்துரை, ஒன்றியச் செயலா்கள் கே.பி.கே.செல்வராஜ், அந்தோணி அமலராஜா, இ.அழகானந்தம், பாஜக மாவட்ட பொதுச் செயலா் குமாரமுருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com