திருநெல்வேலி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் எல்கைக்குள்1929 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மானூா், வள்ளியூா், வன்னிக்கோனேந்தல், மறுகால்குறிச்சி, ரெட்டியாா்பட்டி, செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தோ்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுரை வழங்கினாா்.