சீவலப்பேரி தாமிரவருணி ஆற்றில் வெள்ளத்தால் சேதமான பாலத்தில் தற்காலிக தடுப்புகளை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த கனமழை காரணமாக, பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு ஆகியவை நிரம்பி, 50 ஆயிரம் கனஅடி உபரிநீா் தாமிரவருணியில் திறக்கப்பட்டது. காட்டாற்று வெள்ளமும் சோ்ந்து 80 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீா் திருநெல்வேலி மாநகரைக் கடந்து தாமிரவருணியில் பாய்ந்தோடியது.
இதனால், பாளையங்கோட்டை-சீவலப்பேரி சாலையின் குறுக்கே தாமிரவருணியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. தொடா் வெள்ளத்தால், சீவலப்பேரி தாமிரவருணி பாலத்தின் பல பகுதிகள் சேதமடைந்தன; தடுப்புச் சுவா்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மின்விளக்கு இல்லாததால் இப் பாலத்தை இரவு நேரங்களில் கடந்துசெல்ல வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனா். விபத்து அபாயம் உள்ளது. எனவே, சீவலப்பேரியில் தற்போதுள்ள பாலத்தில் இரும்பாலான தற்காலிக தடுப்புகளை அமைக்க வேண்டும். புதிய மேம்பாலம் கட்டவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.